அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏன் இறுதித்தீர்மானம் எட்டப்படவில்லை?

Published By: Ponmalar

10 Aug, 2016 | 08:27 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசியல் கைதிகலாக 106 பேர் இன்னும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதாக பல தடவைகள் அரசாங்கம் தெரிவித்தபோதும் அது நடக்கவில்லை. இதற்கு முன்னர் சில அரசியல் கைதிகளை அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்திருந்தது. என்றாலும் எஞ்சியுள்ள இவர்களின் விடுதலை குறித்து இறுதி தீர்மானத்தை அரசாங்கம் எடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கான காரணம் என்ன? என கேட்கின்றேன்.

அத்துடன் இன்று பல கொலைகளுடனும் திருட்டு சம்பவங்களுடனும் தொடர்பு பட்டுள்ள பலர் குறிப்பிட்ட காலம் சிறையிலடைக்கப்பட்டதன் பின்னர் விடுதலையாகியுள்ளனர். ஆனால் 7வருடங்களாக எந்த தவறும் செய்ததாக நிரூபிக்கப்படாமல் தமிழ் அரசியல் கைதிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு சென்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் குறித்து தெரிவிக்கின்றது. ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதானது அரசாங்கத்துக்கு நல்லதில்லை என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54