யாழில் பிறந்து பத்தே நாள் ஆனா ஆண் குழந்தையை வீதியில் விட்டு சென்ற தாயை இளவாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ம் திகதி யாழ்.இளவாலை வடலியடைப்பு பகுதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தை அநாதரவான நிலையில் கடதாசி பெட்டி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
வடலியடைப்பு பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு அருகில் கடதாசி பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பிள்ளை ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தை தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்டு,பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிசார் சிசுவின் தாயாரை இன்று கைது செய்துள்ளனர்.
அளவெட்டியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய பெண்ணே அவ்வாறு கைது செய்யபட்டு உள்ளார்.
தன்னுடைய கணவர் இந்த சிசு தனக்கு பிறக்கவில்லை எனவும் , வேறு நபருடன் எனக்கு இருந்த தொடர்பின் மூலம் பிறந்த சிசு என என்னுடன் சண்டை இட்டமையால் என் குழந்தையை கடதாசி பெட்டியில் வைத்து வீதியில் விட்டு சென்றேன் இளவாலை பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் பொலிசார் அனுமதித்து உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM