தனது பாட்டியுடன் சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் மீது, அவ்வழியில் வந்த லொறியொன்று மோதிச் சென்றதால், குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை (15.02.2021) 8.00 மணியளவில் பதுளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் பதுளை அரசின் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன், பதுளை அசேலபுரையைச் சேர்ந்த சிவனேசன் வருண் பிரதீஸ் என தெரியவந்துள்ளது.
பதுளை பகுதியில், பாடசாலையொன்றுக்கு தரம் ஒன்றில் அனுமதிப்பதற்கு, அச்சிறுவனை அவரது பாட்டி, கூட்டிச் சென்றுள்ளார். மேற்படி பாடசாலையை அண்மித்த வேளையில் எதிர்த் திசையில் வேகமாக வந்த லொறி பாட்டியையும், சிறுவனையும் மோதிச் சென்றுள்ளது.
இவ்விபத்தில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியானதுடன், பாட்டி படுகாயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், லொறியின் சாரதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM