பள்ளி வாழ்க்கையை ஆரம்பிக்கச் சென்ற சிறுவனின் உயிர் வீதியிலே பறிபோன சோகம்.!

Published By: J.G.Stephan

15 Feb, 2021 | 01:00 PM
image

தனது பாட்டியுடன் சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் மீது, அவ்வழியில் வந்த லொறியொன்று மோதிச் சென்றதால், குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை (15.02.2021) 8.00 மணியளவில் பதுளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் பதுளை அரசின் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன், பதுளை அசேலபுரையைச் சேர்ந்த சிவனேசன் வருண் பிரதீஸ் என தெரியவந்துள்ளது. 

பதுளை பகுதியில், பாடசாலையொன்றுக்கு தரம் ஒன்றில் அனுமதிப்பதற்கு, அச்சிறுவனை அவரது பாட்டி, கூட்டிச் சென்றுள்ளார். மேற்படி பாடசாலையை அண்மித்த வேளையில் எதிர்த் திசையில் வேகமாக வந்த லொறி பாட்டியையும், சிறுவனையும் மோதிச் சென்றுள்ளது.  

இவ்விபத்தில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியானதுடன், பாட்டி படுகாயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், லொறியின் சாரதியை கைது செய்து,  நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09