மேர்வின் சில்வா வட, கிழக்குத் தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ பூரணமாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன்.
அதேவேளை அவர் வட, கிழக்கிற்கு பாதுகாப்பின்றி வருவதனைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சீருடையில் தான் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்களின் கால்களை முறித்திருப்பேன் என மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேர்வின்சில்வாவின் இக் கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் போராட்டமானது ஜனநாயக ரீதியான போராட்டமாகும்.
கிட்டத்தட்ட எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்கான நிலங்களில் 50 வீதமான நிலங்கள் திணைக்களங்கள், படையினர் மற்றும் தென்னிலங்கை மீனவர்கள், வன இலாகா, வன ஜீவராசிகள் திணைக்களம், மகாவலி எல், தொல்லியல் திணைக்களம் போன்றவற்றினூடாக அபகரிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த வடகிழக்கினைப் பொறுத்தவரையிலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது.
இதனைவிட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடும், சிறையில் வாடுபவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் எனவும், சகோதர இனத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதைச்சுட்டிக்காட்டி இந்தப் போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இவர் இந்த போராட்டத்தினை கொச்சைப் படுத்தும்வகையிலே கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இவருடைய இவ்வாறான கருத்து கோமாளித்தனமாகவே இருக்கின்றது. எனவே இவருடைய கருத்துக்களால் எனக்கு சிரிப்பே வருகின்றது.
இவர் வட, கிழக்குத் தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப் பற்றியோ பூரணமாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன்.
அதேவேளை இவர் வட, கிழக்கிற்கு பாதுகாப்பின்றி வருவதனைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
அத்தோடு பொலிஸ் சீருடையினைத் தான் அணிந்திருந்தால், இந்த போராட்டத்தில் பங்குபற்றியவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கின்றார். அவ்வாறு உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் இந்த நாட்டிலே பொலிஸ் சீருடையில் இருந்தால், இவர் கூறுவதைப் போன்று மக்களின் கால்களை உடைக்கமுடியுமா?
இவரின் இத்தகைய கருத்து பொலிஸாரின் செயற்பாடுகளையும் அவர்களின் கடமைகளையும் கேலிசெய்வதாக அமைந்துள்ளதுடன், பொலிஸாரின் சீருடையினை கேலிசெய்வதாகவே அமைந்துள்ளது.
நிச்சயமாக இவ்வாறானவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM