இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 19 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 06 விமானங்களின் மூலமாக 656 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் சவுதி அரேபியாவின் தம்மத்திலிருந்து வருகை தந்த 76 பேரும், மாலதீவில் உள்ள ஆணிலிருந்து வருகை தந்த 58 பேரும், ஜப்பானில் நரிட்டோவிலிருந்து வருகை தந்த 52 பேரும், கத்தாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 38 பேரும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை இக் காலக் கட்டத்தில் 10 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 652 பயணிகள் நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.
அவற்றில் கட்டாரின் தோஹாவுக்கு 144 பேரும் ஓமானின் மஸ்கட்டிற்கு 112 பேரும் புறப்பட்டவர்களுள் அடங்குவர் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM