கனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 651 பேருக்கு பக்கவிளைவு

13 Feb, 2021 | 07:57 PM
image

கனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 651 பேர் பக்க  விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றதாக தெரிய வந்துள்ளது.  இதனால் சிலர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஏற்படும் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் மரணமடைந்தவர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கனடாவின் பிரதம பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறுகையில்,

கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 651 பேருக்கு வேறு வகையான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்களில் 99 பேருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு ஆபத்தான கட்டத்தில் உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் நேற்று வெள்ளிகிழமை வரை 12 இலட்சத்து 11 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47