புதிய பொருளாதார தடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார் என்று ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை கைதுசெய்து சிறை தண்டனை விதித்த விவகாரத்தில் ரஷ்ய அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
அலெக்சி நவால்னியை சிறை வைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அவரை உடனடியாக விடுவிக்கக்கோரி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் பொருளாதார ரீதியில் வலிமை மிகுந்த புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயாராக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில்,
‘‘ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரத் தடைகள் நமது பொருளாதாரத்துக்கு அபாயங்களை உருவாக்கும். மேலும் இந்த தடைகளால் உறவுகளில் முறிவு ஏற்படக்கூடும்.
உலக விவகாரங்களிலிருந்து எங்களை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM