(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 74 000 ஐ கடந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை 936 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 74052 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 66 984 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6281 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று வியாழக்கிழமை மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின.
கொழும்பு 5 ஐ சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி கொவிட் நிமோனியா , நீரிழிவு நோய் மோசமடைந்தமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நரம்புதளர்ச்சி என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனையை சேர்ந்த 70 வயதுடைய பெண்னொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம் , இதய நோய் மற்றும் குருதி உறைவு என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 13 ஐ சேர்ந்த 42 வயதுடைய பெண்னொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி கொவிட் தொற்று , நுரையீரல் புற்று நோய் , மூச்சிழுப்பு, உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
உடதளவின்ன பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய பெண்னொருவர் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி கொவிட் நிமோனியா இரத்தம் நஞ்சானமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM