இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராக இருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
'ஆல்பம்', 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்', 'காவியத்தலைவன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய பாடசாலை தோழர்களுடன் இணைந்து Urban Boyz Studios என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
நிறுவனம் சார்பில் தயாரிக்கும் முதல் படத்தில் 'கைதி', 'அந்தகாரம்', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் நடித்து தன் கணீரென்ற குரலும், கம்பீரமான நடிப்பாலும் ரசிகர்களை வசப்படுத்திய நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் 2019 ஆம் ஆண்டில் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ' த லிப்ட் பாய்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது என்பதும், அவர் தற்போது ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜெயில்' படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM