கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரத்தில் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுப்பு

Published By: Vishnu

12 Feb, 2021 | 09:33 AM
image

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றினுடாக 1,693 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் 10 விமானங்களினூடாக வெளிநாடுகளிலிருந்து 850 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து வருகை தந்த 108 பேரும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வருகை தந்த 102 பேரும் அடங்குவர்.

விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டும் உள்ளனர்.

இதேவேளை இந்த காலகட்டத்தில் 10 விமானங்களினூடாக 843 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டும் உள்ளனர்.

இந்த காலகட்டத்தில், 50 ஆயிரம் கிலோ கிராம் பொருட்கள் இறக்குமதியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், 295,000 கிலோ கிராம் பொருட்கள் கட்டுநாயக்க, விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50