(எம்.மனோசித்ரா)
இலங்கையில் இறுதியாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணி வரை 939 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 73 113 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 66 211 பேர் குணமடைந்துள்ளதோடு 6124 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதனன்று பதிவான மரணங்கள்
நேற்று புதன்கிழமை மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு 5 ஐ சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா , இதய நோய் மற்றும் பக்கவாதம் இவரது மரணத்திற்கான காரணமாகும்.
வத்தளையை சேர்ந்த 51 வயதுடைய பெண்னொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமை மரணத்திற்கான காரணமாகும்.
அழுத்கம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இரத்தம் நஞ்சானமை , சிறுநீரக நோய் மற்றும் கொவிட் நிமோனியா நிலை மரணத்திற்கான காரணமாகும்.
கம்பஹாவை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் திவுலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய ஆணொருவர் இரணவில வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி கொவிட் நிமோனியா நிலையால் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM