ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘ஹோப்” ( Hope ) விண்கலம் 49 கோடியே 50 இலட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து, 201 நாட்கள் பயணம் செய்து, நேற்று முன்தினம் மாலை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் முதல் முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி ‘நம்பிக்கை' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.
1.3 டன் எடை கொண்ட இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்-2ஏ ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு ஆகும். அதன் நினைவாகவே இந்த நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய் அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்துள்ளது.
இது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசு விண்வெளி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“வெற்றி! நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. அங்கு இது செவ்வாய் வளிமண்டலத்தின் முதல் முழுமையான படத்தை வழங்கும்.
நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை எட்டியது மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் விண்வெளி அறிவியல் துறையில் உலகளாவிய சாதனையாளர்களின் உயரடுக்கு பட்டியலில் இணைந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM