பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்

Published By: Digital Desk 3

11 Feb, 2021 | 08:59 AM
image

(எம்.நியூட்டன்)

தமிழ் பேசும் அத்தனை உறவுகளின் அபிலாசைகளின் வெளிப்பாடுதான் பேரணி வெற்றிபெற்றது.

நாம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழச்சி இயக்கம் என்ற பெயரில் ஒரு மக்கள் இயக்கத்தை இங்கு அங்குரார்ப்பணம் செய்கிறோம் என தவத்திரு  வேலன்சுவாமி தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொத்துவில் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரு வெற்றியாக தாயகத்திலும் சர்வதேசத்திலும்  கவனத்தை ஈன்றுள்ளது. அந்த அடிப்படையில் இன்றைய காலத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு வேண்டியும், இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரச ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்லாம் மக்களின் ஜனாசா எரிப்புக்கு எதிராகவும் மலையமக்களின் வாழ்வாதார ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க மறுத்த இந்த அறவெளிப்போராட்டம் இம்மாதம் 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பித்து 7 ஆம் திகதி பொலிகண்டியில் முடிவடைந்துள்ளது .

எங்களுடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு எமக்கு இழைக்கப்பைட்ட அநீதிக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் அறத்தின் படி எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கு 2009 இல் நடைபெற்ற இனப்பபடுகொலைக்கான நீதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அந்த விடையத்தை பாரப்படுத்தி அதற்கான நீதியைபாரப்படுத்தி நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஒன்றிணையவேண்டியது இந்தக்காலம்.

ஈழத்தமிழர்களின் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிக்கும் அத்தனை தமிழ் பேசும் மக்களுக்கும் உணரப்பட்ட காலம் இதனை யார் ஆரம்பிப்பது என்ற ஒரு சிந்தனை காலங்கள் சென்று கொண்டு கொண்டிருக்கின்றது எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறஇருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் அதில் இலங்கையின் விவகாரம் கையாளப்படஇருக்கின்றது. மக்களுடைய உணர்வுகளையும் கருத்துக்களையும் எந்த வித சுயநலம் இல்லாமல் தனி மனிதனையே தனி நிறுவனத்தையே பிரதானப்படுத்தாமல் ஒட்டு மொத்தமாக ஒன்று கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒன்றியங்களின் தலைவர் என்னுடன் தொடர்புகள் ஏற்படுத்தி இப்படி ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஒரு பேரணியை நடத்தவேண்டும் என்று கூறினார். அந்தப் பின்னணியில் அவரால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு வடமாகாணத்தில் நீங்கள் செய்யுங்கள் என்று கூறி கிழக்கிலும் வடக்கிலும் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.

காலம் மிகக்குறைவாக இருக்கின்றது. இது எப்படி சாத்தியம் என்று இருந்தோம். அந்த நேரத்தில் நான் ஒட்டுமொத்த எங்கள் சமூகம் கடந்த பல வருடங்களாக அரசியல் ரீதியிலும் ஆயுத ரீதியிலும் போராடி நின்ற இங்கு மாவீரர்களின் தியாகங்கள் பொது மக்களின் தியாகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் இன்றும் நாங்கள் சுயநலம் சார்ந்து சிந்திக்கின்றோமே கட்சி நலன் சார்ந்து சிந்திக்கின்றோமே ஒரு இனத்தின் தேசத்தின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கின்ற கால கட்டம் பூகோள அரசியலில் தன்னை வலுப்படுத்திக்கொண்டிருக்கும் கால கட்டத்தில் இது ஒரு சரியான காலகட்டம் ஒரு நாள் இருந்தால் என்ன ஒரு மணித்தியாலம் இருந்தால் என்ன இதை நாம் செய்யவேண்டும் என்ற ஒரு ஓர்மம் எனது மனதில் இருந்தது அந்த வகையில் ஆரம்பிக்கப்பட்ட குறிப்பாக ஒழுங்காக செயற்படுத்துவதற்கு காலம் குறைவாக காணப்பட்டது

அரசியல் அபிலாசையை பெற்றுக்கொள்ள நீதியை பெற்றுக்கொள்ள அறத்தின் வழி உரிமையை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டிய தேவை இன்றைய காலம். ஈழத் தமிழர்களாக மட்டுமல்லாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டிய தேவையிருந்தது.

போராட்டத்திற்கு முன்னதாக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. தடையில் எனது பெயரும் உள்ளதா என மறித்து மறித்து சோதனையிட்டார்கள். மத தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. கைது செய்வார்களா தடுக்கப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

நாங்கள் அங்கு சென்ற போது மழை பெய்ய தொடங்கியது. மழை பொலிசாரின்  தடைகளின் மத்தியில் எல்லோரும் போட்டி போட்டக்கொண்டு நடந்தார்கள். நீதிமன்ற தடையை முன்னிறுத்தி சாணக்கியனுடன் பொலிசார் முரண்பட்டனர். அவர் மிக துணிவாக அதை கையாண்டார்.

முதல்நாளில் குறைந்தளவாக மக்கள்தான் இருந்தார்கள். இயற்கை தடை, நீதிமன்ற தடை காரணமாக அந்த பயமிருந்திருக்கலாம். போகபோக மக்கள் கூட தொடங்கினார்கள்.

இதற்கிடையில் சிலசில தொடர்பாடல் தகவல்கள் இருந்ததால் சில சல சலசலப்புக்கள் இருந்தன. இஸ்லாமிய மக்களின் ஆதரவு எமக்கு மிக அதிகளவாக இருந்தது. இஸ்லாமிய- தமிழ் உறவு மீளவும் புதுப்பிக்கும் வாய்ப்பேற்பட்டுள்ளது.

மூன்றாம் நாளில் திருகோணமலையில் சில தடைகள் இருந்தது. ஆனால் வேறு தடைகள் இருக்கவில்லை.

3ஆம் நாள் முடிவில் பேரணியை மேலும் ஒரு நாள் நீடிக்க முடிவு செய்தோம். மக்களின் பேராதரவு வழியில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் காரணமாக இந்த முடிவை எடுத்தோம்.

இது மக்களின் போராட்டம். ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள்தான் நாம் ஒழுங்கமைத்தோம். மிகுதி எல்லாமே மக்கள்தான் செய்தார்கள். அவர்களின் எழுச்சியின் பின்னால்த்தான் நாம் சென்றோம். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்களின் பெரிய எழுச்சியாக இது இருக்கும். தமது உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொணரும் சந்தர்ப்பமாக இது இருந்தது.

எற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில் பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தில் அடிக்கல் நாட்டினோம்  இனப்படுகொலைக்கு நீதி வேண்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயமாக பிரகடனப்படுத்த வேண்டி இந்த பிரகடனம் அமைந்தது.

கடும் போக்கான இராணுவ மயப்பட்ட ஆட்சி நிகழும் போதும் மக்களின் எழுச்சி புலம்பெயர் தேச மக்களிற்கும் உந்ததலை ஏற்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டால்தான் எமது விடுதலை சாத்தியமாகும். இதற்கு வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இருக்கும். அரசியல் பிரமுகர்களின் வகிபாகம் பலம் எமக்கு ஆதரவாக இருக்கும் 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழச்சி இயக்கம் என்ற பெயரில் ஒரு மக்கள் இயக்கத்தை இங்கு அங்குரார்ப்பணம் செய்கிறோம். மக்கள் பேரியக்கம் தொடர்ந்து போராட்டங்களை செய்யும். நிலத்திலும் புலத்திலும் எமது உரிமைகளை வென்றெடுப்போம்.

பல இடங்களிலும் தன்னிச்சையாக பல சம்பவங்கள் நடந்தன. மக்களின் உணர்வுடனான விடயம் 

பருத்தித்துறை நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக 2, 3 இடங்களை இரகசியமாக தெரிவு செய்து வைத்திருந்தோம். செம்மீனில் அடிக்கல் நாட்டுவதாகவும் ஆலடியில் கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானித்தோம். நாம் போகும் போது ஆலடி மக்கள் வழிமறித்து தமது பிரதேசத்தில் நிகழ்வை நடத்துமாறு கேட்டார்கள். செம்மீனில் நடத்தி விட்டு வரலாம் வாருங்கள் என்றோம். அதுவும் தந்திரோபாய ரீதியில்தான் செயற்பட்டோம்.அங்கு அடிக்கல் நாட்டி விட்டு ஆலடியில் வந்த பிரகடனம் வாசித்தோம்.அங்கு சென்றதன் பின்னர்தான் பொலிகண்டி கிழக்கு மேற்கு பகுதிக்குள் இருந்த பிரச்சனைகளை அறிந்தோம். பொத்தவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி எங்கெல்லாம் பிளவுகள் இருந்ததோ அங்கெல்லாம் ஒற்றுமை ஏற்பட்டது. தமிழ் அரசியல் கட்சிகளிற்குள் இணக்கப்பாடு ஏற்பட்டது. தமிழ் முஸ்லிம் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. பொலிகண்டியில் இரண்டு கிராமங்களிற்கிடையில் ஒற்றுமை ஏற்பட்டது. அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தினரையும் பிரிக்க பலர் பல கதைகளை சொல்கிறார்கள். அதிலெல்லாம் உண்மைகள் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04