இந்தியாவில் கைதுசெய்யப்பட்டார் முக்கிய சூத்திரதாரி

Published By: Vishnu

11 Feb, 2021 | 08:20 AM
image

2017 மே 09 ஆம் திகதி பிலியந்தல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காகச் சென்றிருந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பின் பிரிவின் அதிகாரிகள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்ததுடன், மேலும் இரு பொலிஸார் காயமடைந்திருந்தனர்.

அது மாத்திரமன்றி அந்த வழியாகச் சென்ற மூன்று சிறுவர்களும் காயமடைந்ததுடன், 11 வயது சிறுவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந் நிலையிலேயே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மொஹமட் மஹில் மொஹமட் நவாஸ் என்ற சந்தேக நபர் சில வாரங்களுக்கு முன்பு மதுரை போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய இன்டர்போல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டர்ல் மாத்திரமே...

2024-03-29 12:20:15
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30