மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020-22021 இற்கான பெரும்போக நெற்செய்கையில் இதுவரை 60 வீதமான அறுவடை நிறைவு பெற்றிருப்பதாக விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராசா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு இன்று (10.02.2021) தகவல் தெரிவித்தார். இப்பெரும்போக நெற்செய்கை அறுவடை இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பெரும்போகத்தில் இம்மாவட்டத்தில் 76 ஆயிரத்தி 346 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை பண்ணப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அவற்றில் 100 வீதமான நிலங்களில் நெற்பயிர் செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன் அவற்றுக்காக அரசினால் வழங்கப்படும் மானிய உரங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன.
மேலும் இம்முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 11 ஆயிரத்தி 938 விவசாயிகளினது வயல்நிலங்களான 10 ஆயிரத்தி 412.5 ஹெக்டேயர் நெற்செய்கை அழிவுற்றுள்ளது. இது தவிர மீதமுள்ள 65 ஆயிரத்தி 933.5 ஹெக்டேயர் விவசாய நிலத்தில் கிடைக்கப்பெற்ற நெல் விளைச்சல்களில் 60 வீதமானவை அறவடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை இம்மாத இறுதிக்குள் அறுவடை செய்யப்படவுள்ளதாகவும் அவர் மெலும் தெரிவித்தார்.
இம்முறை கிடைக்கப்பெற்ற சராசரி விளைச்சலானது ஏக்கர் ஒன்றிற்கு 25 தொடக்கம் 30 மூடைகள் என தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர அரச சுற்றுநிருபத்திற்கமைவாக இவ்வருடம் 2020-2021 பெரும்போக நெற் செய்கையின்போது எவரேனும் ஒரு விவசாயி ஒரு ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) அல்லது அதற்கு அதிகமான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும்போது நெல் உரநிவாரண நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நிவாரண உரங்களை 300 கிலோ அல்லது அதற்கு அதிகமான அளவுகளில் பெற்றுக் கொள்கின்ற விவசாயிகள் தாம் அறுவடைசெய்யும் நெல்லில் ஆகக்குறைந்தது 1000 கிலோ அல்லது அதற்கு அதிகமான அளவை அல்லது விவசாயிகளின் விருப்பப்படி அதற்கதிகமான அளவு நெல்லை அரசநெல் சந்தைப்படுத்தும் சபைக்கு கட்டாயமாக வழங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM