கனகாம்பிகை கோயிலுக்கு அருகில் எந்தவிதமான அனுமதியும் இன்றி பௌத்த விஹாரை அமைக்கப்படுமாயின் அது பௌத்த மதத்திற்கு முரணானதாகும் என்று பேலியகொடை கங்காராம பௌத்த விகாரையின் விமலகனே தேரர் தெரிவித்தார்
கிளிநொச்சி பொன்னகர் பகுதிக்கு கம்போடியா பௌத்த மதகுரு லெச் சொனான் சகிதம் வருகைதந்த பேலியகொடை கங்காராம பௌத்த விகாரையின் மதகுரு விமலகனா, அங்குள்ள நூறு குடும்பங்களுக்கு பேலியகொடை கங்காராம விகாரையின் நிதி உதவியில் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய சிறிய பொதியினை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் கனகாம்பிகைக் கோயிலின் அருகில் ஆலயத்தின் மூன்றாவது வீதியினை மறித்து புத்த கோயில் ஒன்று கட்டப்பட்டுவருகின்றது.
இது சம்பந்தமாக பௌத்த மதத்தின் மதகுரு என்ற வகையில் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் தொடுத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாமும் இந்து தெய்வங்களை வணங்குகின்றோம். ஒரு இந்துக் கோயிலின் அருகில் பௌத்த விகாரை அமைப்பது தவறில்லை.
ஆனால், உங்களால் குறிப்பிடப்பட்ட கனகாம்பிகைக் கோயிலுக்கு அருகில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை அவ் ஆலய நிர்வாகத்தின் அனுமதி இன்றியோ அல்லது மக்களின் விருப்பமின்றியோ, அமைக்கப்பட்டதாயின் அது பௌத்த ஆகமத்திற்கு முரணானது.இக்கருத்தினை ஊடகங்களிற்கு என்னால் தெரிவிக்க முடியாது. ஆனால் இவ் விகாரை அமைப்பு சம்பந்தமாக கிளிநொச்சியில் உள்ள பௌத்த மதகுருவுடன் உரையாடி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டியுள்ளது.
சிங்கள மக்களுக்கே அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன என்று கூறுகின்றார்கள். அது உண்மையல்ல.
நானும் ஒரு வறுமையான பிரதேசத்தில்தான் வசிக்கின்றேன். அங்கு மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவித உதவியும் வழங்கப்படவில்லை.
இங்குள்ள தமிழ்மக்களுக்கும் அவ்வாறே உள்ளது. ஆனால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலையால் தமிழ் மக்கள் பாரிய துன்பத்தை அனுபவித்திருப்பது உண்மைதான். தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்கின்றோம். அதேபோல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM