மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தலைநகர் நெய் பை தவ் நகரில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது அந்நாட்டு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர்.
மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் தொடர்ந்து மக்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களுக்கு இராணுவ ஆட்சி வேண்டாம், ஜனநாயக ஆட்சி தான் வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த களமிறங்கியுள்ள பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைத்து வருகின்றனர்.
பொது பாதுகாப்பு அல்லது "சட்டத்தின் ஆட்சிக்கு" அச்சுறுத்தல் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தொலைக்காட்சி போராட்டக்காரர்களை எச்சரித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய போராட்டம் மியன்மாரில் வெடித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM