கணவனைக் கத்தியால் குத்திய மனைவி : ஆபத்தான நிலையில் கணவன், மனைவி கைது

08 Feb, 2021 | 02:50 PM
image

கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றவே, ஆத்திரம் கொண்ட மனைவி, மரக்கறி வகைகள் வெட்டும் கத்தியை எடுத்து தனது கணவனை பலமுறை குத்தியுள்ளார்.

இச் சம்பவம் மொனராகலைப் பகுதியின் நக்கலவத்தை என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

பலத்த கத்திக் குத்துக்கிலக்கான நபர், ஆபத்தான நிலையில் மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை மேற்கொண்ட மொனராகலை பொலிசார், கத்திக் குத்துக்கிலக்கான நபரின் மனைவியைக் கைதுசெய்துள்ளதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த நிலையிலான கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நிறைவுற்ற பின்னர், அப் பெண் மொனராகலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  ஆஜர் செய்யப்படுவாரென்று மொனராகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  இந்திக்க கமகே தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31