மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 207 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெப்ரவரி மாதம் வரை 190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 150 கொரோனா தொற்றாளர்கள் சமூகத்திலும், 40 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் நகர பகுதியில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுகின்றது. எனினும் முசலி பிரதேசத்தில் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்களின் குடும்ப உறவுகள் அதிகமானோர் தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.
இது சமூகத்தில் வைரசின் அளவு அதிகரித்து செல்வதற்கு ஒரு அறிகுறியாக உள்ளது. எனவே பொது மக்கள் இந்த நிலமையை கருத்தில் கொண்டு மிகவும் அவதானத்தோடும், விழிப்புணர்வுடனும் சுகாதார நடை முறைகளை பின் பற்றி நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகின்ற பட்சத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 8,962 பி.சி.ஆர்.பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 334 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார சேவையில் கடமையாற்றுகின்ற 91 சத வீதத்திற்கும் அதிகமான உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி 4 வாரங்களின் பின்னர் மீண்டும் செலுத்தப்பட உள்ளது.
மேலும், இன்றைய தினம் திங்கட்கிழமை(08.02.2021) மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற 70 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM