மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு: வைத்தியர் டி.வினோதன்

Published By: J.G.Stephan

08 Feb, 2021 | 02:06 PM
image

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 207 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பெப்ரவரி மாதம் வரை 190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 150 கொரோனா தொற்றாளர்கள் சமூகத்திலும், 40 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் நகர பகுதியில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுகின்றது. எனினும் முசலி பிரதேசத்தில் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்களின் குடும்ப உறவுகள் அதிகமானோர் தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.

இது சமூகத்தில் வைரசின் அளவு அதிகரித்து செல்வதற்கு ஒரு அறிகுறியாக உள்ளது. எனவே பொது மக்கள் இந்த நிலமையை கருத்தில் கொண்டு மிகவும் அவதானத்தோடும், விழிப்புணர்வுடனும் சுகாதார நடை முறைகளை பின் பற்றி நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகின்ற பட்சத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 8,962 பி.சி.ஆர்.பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 334 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார சேவையில் கடமையாற்றுகின்ற 91 சத வீதத்திற்கும் அதிகமான உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி 4 வாரங்களின் பின்னர் மீண்டும் செலுத்தப்பட உள்ளது.

மேலும், இன்றைய தினம் திங்கட்கிழமை(08.02.2021) மன்னார் பொலிஸ் நிலையத்தில்  கடமையாற்றுகின்ற 70 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51