முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை உண்மையில் நிறுத்த விரும்பினால், ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கிவிட்டு அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்ப வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியது அமெரிக்கா தான், இந்த ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்கா தான், மரியாதைக்குரிய மற்றும் ஒப்பந்தத்திற்கு இணங்க எந்த நாட்டையும் தண்டித்ததும் அமெரிக்கா தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளிலிருந்து அமெரிக்கா விலக விரும்புகிறதா, அல்லது ட்ரம்பின் "தோல்விகளை" கட்டியெழுப்ப விரும்புகிறதா என்பதை பைடன் நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஸரிஃப் வலியுறுத்தினார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இரத்து செய்யப்பட்டால் மட்டுமே தனது நாடு அதன் கடமைகளுக்குத் திரும்பும் என்று கூறினார்.
இந் நிலையில் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நாடு தனது உறுதிப்பாட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்காது என்று ஜனாதிபதி ஜோ படைன் கூறியுள்ளார்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலில் சமீபத்திய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் ஈரான், P5+1 குழுக்கள் (அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராஜ்ஜியம்- ஜேர்மனி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு விரிவான செயல் திட்டத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் அளவிட வேண்டும் மற்றும் பொருளாதாரம் தடைசெய்யப்பட்ட நிவாரணத்திற்கு ஈடாக அதன் யுரேனியம் இருப்புக்களை கடுமையாக தரமிறக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டில், அமெரிக்கா ஈரான் மீதான தனது சமரச நிலைப்பாட்டை கைவிட்டு, கூட்டு விரிவான செயல் திட்டத்திலிருந்து விலகியதுடன் தெஹ்ரானுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அமல்படுத்தியது.
அதனால் ஈரான் இந்த ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை பெரும்பாலும் கைவிட தூண்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM