இந்தியாவில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அங்கு உருளைக்கிழங்கு, கரும்பு, மலர்ச்செடிகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் அமைத்துள்ள போராட்டக்களத்தை சுற்றி பொலிஸார் இரும்பு வேலிகள், முள் வேலிகள் கொண்டு அடைத்துள்ளனர்.
மேலும் வீதிகளில் இரும்பு கம்பிகளையும் பதித்து போராட்டக்காரர்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.
ஆனால் அந்த கோட்டைக்குள்ளேயும் விவசாயிகள் சிலர் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
இதற்காக செடிகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி வந்து நட்டு வளர்த்து வருகின்றனர்.
காஜிப்பூர் எல்லையில் கரும்பு உள்பட பல்வேறு பயிர்களை நட்டுள்ளனர். சிலர் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். வேறு சிலரோ ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர்ச்செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
இதைப்போல சிங்கு எல்லையிலும் விவசாயிகள் மலர்த் தோட்டம் அமைத்து இருக்கிறார்கள்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிதுள்ளதாவது,
‘அரசு எங்களை சுற்றி வலிமையான இரும்பு வேலி அமைக்கிறது. ஆனால் நாங்களோ மலர்ச்செடிகளை வளர்க்கிறோம்.
இதுதான் எங்கள் செய்தி. எங்கள் மீதான அடக்குமுறையை நாங்கள் அன்பினால் எதிர்கொள்வோம்’ என்று தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM