பூரண அரச மரியாதையுடன் சோபித தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று

19 Nov, 2015 | 11:03 AM
image

மறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு ­வாவே சோபித தேரரின் இறுதிக்கிரி­யைகள் பூரண அரச மரி­யா­தை­யுடன் இன்று பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் இடம்­பெறு­கின்­றன.



கோட்டே நாக­வி­கா­ரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாவே,


சோபித தேரர் கடந்த சில கால­மா­கவே இரு­தய நோய் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிங்­கப்பூர் மவுன்ட் எலி­சபெத் வைத்­தி­ய­சா­லையில் அதி­காலை 4.30 மணி­ய­ளவில் தனது 73ஆவது வயதில் கால­மானார்.


அவ­ரது பூத­வுடல் அன்­றி­ரவு இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு கோட்டே ஸ்ரீ நாக­வி­கா­ரையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இன்று அவ­ரு­டைய இறுதிக் கிரியை பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றது. இன்று நடை­பெறும் அவ­ரது இறுதிச் சடங்­கு­களை பூரண அரச மரி­யா­தை­யுடன் இடம்­பெ­று­வ­துடன் இன்­றைய தினத்தை தேசிய துக்க தின­மா­கவும் அனுஷ்­டிக்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.


அதே­வேளை மாது­லு­வாவே சோபித தேரரின் மறைவை நாடு­பூ­ரா­கவும் உள்ள மக்கள் துக்க தின­மாக அனுஷ்­டிக்கும் வகையில் நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் பெளத்த காவி நிற கொடி­களை பறக்­க­விட்­டுள்­ள­துடன் இன்­றைய தினம் நாட்டில் உள்ள மது­பான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்­தையும் மூடு­மாறும் அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.


அதேபோல் பெளத்த பிரி­வினா பாட­சா­லைகள் மற்றும் ஸ்ரீ ஜெய­வர்­த­ன­புர கோட்டே பகு­திக்­கு­ரிய பாட­சா­லை­களும் மூடப்­ப­ட­வுள்­ளன. மேலும் கடந்த மூன்று நாட்­க­ளாக மக்கள் இறுதி அஞ்­சலி செலுத்­த­வந்­தனர். மக்­க­ளுக்கு இன்று முற்­பகல் 11 மணி வரை மக்கள் அவ­ருக்­கான இறுதி அஞ்­ச­லி­களை செலுத்த அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.


ஜனா­தி­பதிஇ பிர­தமர் முன்னாள் ஜனா­தி­பதி உள்­ளிட்ட அனைத்து அர­சியல் தலை­வர்­களும், பிர­ப­லங்­களும் தேர­ருக்கு இறுதி அஞ்­சலி செலுத்­தினர். அதேபோல் பெரும்­தி­ர­ளான மக்கள் இறுதி அஞ்­ச­லியை செலுத்­தவும் வருகை தந்­தி­ருந்­தனர்.


இந்­நி­லையில் இன்று பிற்­பகல் 1 மணிக்கு நாக­வி­கா­ரையில் இருந்து கொண்­டு­செல்­லப்­படும் அவ­ரது உடல் ஊர்­வ­லா­மாக எடுத்து செல்­லப்­பட்டு பாரா­ளு­மன்ற மைதா­னத்தை வந்­த­டையும் எனவும் மக்­களை இந்த ஊர்­வ­லத்தில் கலந்­து­கொள்­ளு­மாறும் நாக­வி­கரை நிர்­வாகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ஊர்­வ­லத்தில் கலந்­து­கொள்ள முடி­யாத பொது­மக்கள் இன்­றைய தினம் பிற்­பகல் 3 மணி­ய­ளவில் பாரா­ளு­மன்ற மைதா­னத்தை வந்­த­டை­யு­மாறும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.


மேலும் தனது உடலை தகனம் செய்ய முன்னர் தனது உடலில் இருந்து எடுக்­க­கூ­டிய உறுப்­பு­களை தானம் செய்ய தான் விரும்­பு­வ­தா­கவும் அவ­ரது கண் மற்றும் பயனுள்ள உறுப்புகளை உடலுறுப்பு தான சங்கத்திடம் வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஸ்ரீ நாகவிகாரையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடநெறியில் உட்புகுத்தவும் அனைத்து நூதனசாலைகளிலும் புத்தகமாக வைக்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31